Showing posts with label Kollywood Cinema News. Show all posts
Showing posts with label Kollywood Cinema News. Show all posts

ஆணழகனின் உண்மை அனுபவங்கள்-7

>> Tuesday, May 4, 2010

நாங்க பொற்தாமரைக்குளக் கரையில் ஒரு தூண் மறைவில் உட்கார்ந்து கொண்டோம். மைதிலி என்னிடம்," என்னங்க வேலன், நாந்தான் பேசிக் கிட்டே வ்ர்றேன்..நீங்க ஒண்ணுமே பேச்மாட்டேன்கிறீங்கன்னு கேட்டாள். நான் மென்னு முழுங்கியபடி..அது வந்து..என் ப்ரெண்ட் வந்து பாத்துட்டு ஏமாந்து போயிடுவானோன்னு நெனப்பிலே ஒண்ணுமே பேசவரலே..சரி இப்பக் கேளுங்க..பதில் சொல்றேன்ன்னு சொன்னேன்.. அப்ப அவ கேட்டா..நீங்க இதுக்கு முன்னால யாரையாவது லவ் பண்ணியிருக் கீங்களான்னு... எனக்கு என்ன பதில் சொல்லறதுன்னே தெரியலே.. யாரைன்னு குறிப்பிட்டுச் சொல்றது.. இப்ப இருக்கற மாலதி வரைக்கும் நாலஞ்சு பெண்களை உயிருகுயிராக் காதலிச்சிருக்கேன்.. இன்னும் காதலிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.. இதுலே யாரைக் குறிப்பிட்டுச் சொல்றதுன்னு யோசிச்சேன்..என்ன யோசிக்கிறீங்க. .இதுக்குமுன்னால உங்களுக்குக் காதல் அனுபவம் இருக்கா இல்லையா வேலன்..என்று அவள் மீண்டும் கேட்க..
அது வந்து.. அது வந்து..எனக்கு ரெண்டு காதலி இருக்காங்கன்னு ..நான் சொன்னதும், அவ திடுக்கிட்டாள்.. என்னது ரெண்டுபேரா.. யார் யார் அவங்கன்னு கேட்டா.. என்னோட முதல் காதலி கிரிக்கெட்.. அடுத்த காதலி மேத்ஸ் சப்ஜெக்ட் தான்..என்று நான் சொன்னதும், கல கலன்னு சிரிச்சுட்டு..அப்பாடி தப்பிச்சேன் என்றாள். ஏன் நீங்க என்ன நினச்சீங்க.. என்னைப் பாத்தா பொம்பளைங்க பின்னால சுத்தறவன் மாதிரி தெரியுதான்னு நான் கேட்க, அப்படியில்லை, உங்களுக்கிருக்கிற திறமைக்கும், அழகுக்கும், நீ, நான்னு போட்டி போட்டுக்கிட்டு பொண்ணுங்க உங்க பின்னால வருவாங்களே.. அதான் கேட்டேன்.. என்றாள்.. அதுதானே உண்மை என்று நான் மனதுக்குள் நினைத்து சிரித்துக் கொண்டேன்.


ஏன் சிரிக்கிறீங்க..என்னடா இது சந்திச்ச மொத நாளே இவ இப்படி பேசறாளேன்னுதானே..என்று அவள் கேட்க,இல்லை இல்லை..நீங்க இப்படி ஓப்பனாப் பேசறது எனக்கு புடிச்சிருக்கு.. சரி நீங்க யாரையாவது லவ் பண்ணியிருக்கீங்கலான்னு கேட்டேன்..

இதுவரைக்கும் எனக்குப் புடிச்ச ஆம்பிள்ளையைப் பாக்கலே..ஆனா இப்போ அதைப் பத்தி யோசிக்கிறேன்னு அவ சொன்னா. அப்படி சொல்லும் போதே.. அவ முகம் வெட்கத்தாலே குப்புன்னு சிவந்து போச்சு..அட மைதிலி கூட அழகா இருக்காலேன்னு மனசு சொல்லிச்சு.. அப்படீனா.. நீங்க காதல் வலையில் விழுந்துட்டீங்கன்னு சொல்லுங்க..என்றேன். இன்னும் இல்லே.. ஆனா சீக்கிரம் விழுந்துடு வேனோன்னு பயமாயிருக்குன்னு அவ சொன்னா.. அட யார் அந்த லக்கிச் சேப்..என்று நான் கேட்க. இன்னும் கன்பார்மா தெரியலே..நான் விரும்பறமாதிரி அவரும் என்னை விரும்பணுமில்லே..

"உங்களை யாருக்குப் பிடிக்காம போகும்? நிச்சயம் நீங்க நெனக்கற ஆள் உங்களைக் காதலிப்பார்"ன்னு நான் சொன்னதும், "உண்மையாத் தான் சொல்லறீங்களா? என்னை அவருக்கும் பிடிக்கும்னு சொல்லறீங்களா?" என்று ஆர்வத்துடன் அவள் கேட்டாள். "இதிலென்ன சந்தேகம்? உங்களை ஒருத்தனுக்கு பிடிக்கலேன்னா ஒண்ணு அந்த ஆள் குருடா இருக்கணும்..இல்லே..உண்மையான ஆம்பிளையா இருக்கமாட்டான்.."என்று நான் சொன்னதும், அவள் முகம் வெட்கத்தால் சிவந்தது."வேலன், நான் அவ்வளவு அழகாவா இருக்கேன்?" என்று அவள் கேட்டாள்."ஆமாம், அழ்காத்தான் இருக்கீங்க..உங்களை லவ் பண்ணக் கொடுத்து வச்சிருக்கணும்"என்று நான் சொல்ல, "அப்படீன்னா நீங்களே ஏன் என்னை லவ் பண்ணக்கூடாதுன்னு" அவள் பட் டென்ட்று தேங்காய் உடைத்ததுபோல் கேட்க..நான் ஆடிப் போனேன்.

"நீங்க..என்ன சொல்லறீங்க..நாம் பழக ஆரம்பிச்சு பத்து நிமிஷம் தான் ஆச்சு..அதுக்குள்ள என்னை எப்படி உங்களை லவ் பண்ணச் சொல்லறீங்க? என்னைப் பத்தி உங்களுக்கு முழுசாக் கூடத் தெரியாது.." என்று நான் தடுமாற்றத்துடன் சொன்னேன். "இல்லை வேலன், உங்களைப் பத்தி முழுசாத் தெரிஞ்சுக்கிட்டுத்தான் இதைக் கேட்கிறேன்..என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா"ன்னு அவள் வெளிப்படையாகக் கேட்டாள்.. அட இவ ரொம்ப ஃபாஸ்ட்..அதேசமயம் ரொம்ப ஓபன் டைப் கூடன்னு நெனச்சுக்கிட்டு குளத்திலிருந்த மீன்களைப் பாத்துக்கிட்டு பேசாம இருந்தேன்.

"ஏன் வேலன் மவுனமாயிட்டீங்க..நான் ஏதாவது தப்பாக் கேட்டிருந்தா என்னை மன்னிச்சுடுங்கன்னு" அவ சொன்னதும், சுய நினைவுக்கு வந்தேன். "அதில்லை மைதிலி, காதல்ங்கறது என்ன கேட்டவுடனே கிடைக்கற பொருளா..அது மனசு சம்பந்தப் பட்டது. மனசு ரெண்டும் ஒத்துப் போனாத்தான் காதல் வரும்..நீங்க என்னை விரும்பறமாதிரி நானும் உங்களை விரும்பணுமில்லையா..எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு உண்மைதான்..ஆனா அது காதல் இல்லை. ப்ளீஸ் எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கன்னு" தலையைக் குனிஞ்சிக்கிட்டே சொன்னேன்.

அவள் ஒன்றும் பேசாமல் மவுனமாக இருந்தாள். இருவரும் குளத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். என் மனமோ "ஐயோ..அங்கே மாலதி எனக்காகக் காத்துக் கொண்டிருப்பாளே.. என்னைக் காணாமல் ஏமாந்து போய்விடுவாளே" என்று ஏங்கியது.. நேற்று ராத்திரி நான் அவளிடம் நடந்து கொண்ட காதல் விளையாட்டுக்கள் என் மனத்திரையில் ஓடி மறைந்தது. மைதிலி என் மவுனத்தைக் கலைத்தாள்.."சரி மிஸ்டர் வேலன்..நான் கொடுத்து வைத்தது அவ்வள்வுதான்.. உங்களை அடைய யாருக்குக் கொடுத்து வச்சிருக்கோ தெரியலே..அப்ப நான் போயிட்டு வர்றேன். நான் உங்க மனசை புண் படுத்தியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க"ன்னு சொல்லிட்டு எழுந்தாள். நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன்..அவள் கண்களில் கண்ணீர் திரையிட்டிருந்தது. "மைதிலி..அழறியா? ஐ ஆம் ஸாரி..நான் என் மனசை ஏற்கனவே இன்னொரு பெண்ணிடம் பறி கொடுத்து விட்டேன். அவ இருக்கற இடத்திலே வேறொருத்திக்கு இடமில்லை..அவளுக்கு துரோகம் செய்ய மனம் வரலே" என்று நான் சொன்னவுடன், கண்களைத் துடைத்துக் கொண்ட மைதிலி,"யார் அந்த அதிர்ஷ்டசாலின்னு நான் தெருஞ்ச்சுக்கலாமா" என்று கேட்டாள். "அவள் பெயர் மாலதி, என் சொந்தக்காரப் பெண்.. இப்போ லீவுக்கு மதுரைக்கு வந்திருக்கா. என் அக்கா வீட்டிலே தங்கியிருக்கா..நாங்க ரெண்டு பேரும் உயிருக்குயிராக் காதலிக்கறோம். இன்ஃபேக்ட் நான் இங்கே அவளுக்காகத் தான் காத்துக்கிட்டிருந்தேன்.. வன்னிமரத்தடி பிள்ளையார் கோவிலில் சந்திக்கிறதா ப்ளான் பண்ணியிருந்தோம்.. அதுக்குள்ள நீங்க வந்தீங்க..என்னை இங்கே கூட்டிக்கிட்டு வந்துட்டீங்க. அவ பாவம் எனக்காக அங்கே காத்துக்கிட்டிருப்பா"ன்னு நான் சொன்னதும், அவ பரபரப்புடன், "அடடே..இதை மொதல்லேயே ஏன் நீங்க சொல்லலே..ஐயோ பாவம். அவ உங்களை காணாமல் ஏமாந்து போயிருப்பா..நான் ஒரு முட்டாள்..உங்களை நல்லாப் புருஞ்சுக்கிட்டேன்னு நெனச்சுக்கிட்டு..ஏதேதோ பேசி உங்களோட பொன்னான நேரத்தை வீணடிச்சுட்டேன்..வாங்க வன்னி மரத்தடி பிள்ளையார் கோவிலுக்குப் போவோம்..எனக்கும் அவளைப் பாத்தமாதிரி இருக்கும்..உங்களோட லவ்வரை நான் பாக்கலாமில்லையா.. உங்களுக்கு ஆட்சேபம் ஏதும் இல்லையே" என்றாள்.

நான் கொஞ்சம் யோசிச்சேன்..இப்போ இவளை அங்கே கூட்டிக்கிட்டுப் போனா..மாலதிக்கு அநாவசியமான சந்தேகம் வரும்..அது எங்களோட காதலையும் பாதிக்கலாம் என்று தோன்றியது.."மைதிலி நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா ஒண்ணு சொல்லட்டுமா.. இப்போ நீங்க என்னோட வந்தா..நான் இத்தனை நேரம் அவளைக் காக்க வச்சுட்டு, உங்களோட டைம் பாஸ் பண்ணினேன்னு தெரிஞ்சு ரொம்ப வருத்தப் படுவா..அதுமட்டுமில்லே.. வீணா சந்தேகமும் படுவா.. அது தேவையா" என்றேன். ஒரு நிமிஷம் மவுனமாக என்னையே பாத்துக் கொண்டிருந்த மைதிலி, "அப்போ சரி. நீங்க மட்டும் போயிட்டு வாங்க..நான் இன்னொரு சமயம் அவளைப் பாத்துக்கறேன்" என்று சொல்லிவிட்டு விருட்டென்று நடந்து சென்று கூட்டத்தில் கலந்து மறைந்தாள். அடிப்பாவி..உன்னாலே என் அழகு மாலதியை அநாவசியமா அரைமணி நேரம் காக்க வச்சுட்டேனேன்னு நெனச்சுக்கிட்டு எழுந்து அவசர அவசரமா பிள்ளையார் கோவிலுக்கு ஓடினேன்.. அங்கே..ஒரு தூண் அடியில் அமைதியாகக் கண்களை மூடி உட்கார்ந்திருந்தாள் மாலதி.

"என்ன மாலதி தூக்கமா? ஸாரி கொஞ்சம் லேட்டாயிடுச்சு. நீ வந்து ரொம்ப நேரமாச்சா"ன்னு பரபரப்புடன் கேட்டேன். அவள் அமைதியாகக் கண்விழித்து என்னை பார்த்தாள்..அவளுடைய அழகான கருவண்டு விழிகள் கலங்கியிருந்தன.. எனக்கு பக்கென்றிருந்தது.."ஏன் மாலதி அழறே? நான் லேட்டா வந்தேன்னு வருத்தமா? உன்னைக் காக்க வச்சுட்டேன்னு கோபமா?"என்று அவள் கன்னங்களில் வழிந்த நீரைத் துடைத்து விட்டபடி கேட்டேன். என் கைகளை மெல்லத் தட்டிவிட்டவள், அமைதியாக," யார் அவள்?"என்று தலையைக் குனிந்து கொண்டு கேட்டாள். "யார்? யாரைக் கேட்கிறாய்?" என்று புரியாதவன் போல் கேட்டேன். "நடிக்க வேண்டாம். கேட்ட கேள்விக்கு பதில்..இத்தனை நேரம் பொற்தாமரைக் குளத்திலே உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தீங்களே? அவதான்.." என்று தலையைக் குனிந்தபடியே கேட்டாள்..அவள் கண்களில் நீர் பெருகி கன்னங்களில் வழிந்து அவளுடைய நீலவண்ண சுடிதாரை நனைத்தது.

"அது வந்து மாலதி..அவபேரு மைதிலி..எங்க பெரியம்மா வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கா. இன்னிக்குத்தான் மொதல் மொதலா அவகிட்டே பேசினேன்..நான் இங்கேதான் உனக்காகக் காத்துக்கிட்டிருந்தேன்..அவதான் வந்து வாங்கலேன்.. கொஞ்ச நேரம் பொற்தாமரைக் குளக்கரையில் உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்போம் ன்னு கூப்பிட்டா. நீ வர லேட்டாகும் போலிருந்தது..அதனால அவ கூட போய் பேசிக்கிட்டிருந்தேன்.. ஆனா என் மனசெல்லாம் எங்கே நீ வந்து பாத்துட்டு ஏமாந்து போயிடுவியோன்னுதான் கெடந்து அடிச்சுக்கிட்டிருந்திச்சு.. அதே மாதிரி நீ வந்து காத்துக்கிட்டிருக்கே.. ஆமா நாங்க பொற்தாமரைக் குளத்துக்குப் போய் பேசிக்கிட்டிருந்தது எப்படி உனக்குத் தெரிஞ்சிச்சு?" என்று வியப்புடன் கேட்டேன்.

நான் உள்ளே வந்துக்கிட்டிருந்தப்போ நீங்க அவகிட்டே பேசிக்கிட்டே குளக்கரைக்குப் போறது தெரிஞ்சுது..எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு..நானும் உங்க பின்னாலேயே வந்தேன்..நீங்க திரும்பித் திரும்பிப் பாத்தீங்க, ஆனா என்னை கவனிக்கலே. நான் நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டிருந்த இடத்துக்குக் கொஞ்ச தூரத்திலே உட்கார்ந்து பாத்துக்கிட்டிருந்தேன்..நீங்க ரெண்டு பேரும் கிட்டதட்ட அரைமணி நேரம் பேசிக்கிட்டிருந்தீங்க.. அவ என்னவோ சொல்ல நீங்க சிரிச்சீங்க..அதேபோல் நீங்க பேசும்போது அவ சிரிச்சுக்கிட்டே உங்க முகத்தையே பாத்துக்கிட்டிருந்தா.. மொதல் மொதல் பாக்கர பொண்ணு மாதிரியே தெரியலே..அப்படி என்ன சிரிக்க சிரிக்கப் பேசினீங்க ரெண்டுபேரும்..இங்கெ நான் ஒருத்தி பைத்தியமாட்டம் உங்களுக்காகக் காத்துக் கிட்டிருக்கேன்..நீங்க என்னடான யாரோ ஒருத்தி கூட கதைபேசிட்டு சாவகாசமா வரீங்க..

இதான் என்மீது நீங்க வச்சிருக்கற அன்பின் லட்சணமா? என்னைவிட அழகா ஒருத்தியைப் பாத்ததும் உடனே கட்சி மாறிட்டீங்க பாத்தீங்களா? இந்த ஆம்பிளைகளே இப்படித்தான்.."என்று கண்கள் கலங்க சொல்லி முடித்தாள். நான் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, மெல்ல அவள் முகத்தை என் கைகளில் ஏந்திக் கொண்டு,"அடி அசடே..இதுதான் நீ என்னைப் புரிந்து கொண்ட லட்சணமா? பெண் புத்தி பின் புத்தின்னு சரியாத்தான் சொல்லியிருக்காங்க.. கண்ணால் காண்பதும் பொய்..காதால் கேட்பதும் பொய்..தீர விசாரிப்பதே மெய்யின்னு உனக்குத் தெரியாதா? நான் உனக்கு துரோகம் செய்வேன்னு நீ நினைக்கிறியா?" என்று அன்புடன் கேட்டேன்.

அவள் மலர்ந்த முகத்துடன் என்னைப் பார்த்தாள். அவளுடைய கலங்கிய கண்கள் சந்தோஷத்தில் விரிந்தன,"நெஜமாவாச் சொல்லறீங்க? அவகூட சாதாரணமாத்தான் பேசிக் கிட்டிருந்தீங்களா? நான் பயந்தே போயிட்டேன்.."என்று செப்பு வாய் திறந்து பேசினாள். நான் அவளை ஆதரவுடன் அணைத்துக் கொண்டேன்.."விடுங்க..இது கோவில். யாராவது பாக்கப் போறாங்க."என்று சற்று தள்ளி உட்கார்ந்து கொண்டாள் மாலதி. "சரி..எழுந்திரு..பொற்தாமரைக் குளக்கரையில் உட்கார்ந்து பேசலாம்..அந்த இடம் எனக்குப் புடிச்சிருக்கு.."என்றேன். அவள் ஆசையுடன் எழுந்து என்னுடன் வந்தாள். அங்கிருந்த வளையல் கடையில் அவளுக்குப் பிடித்த வளையல் வாங்கி கொடுத்தேன். அப்புறம் இருவரும் கைகோர்த்துக் கொண்டு குளக்கரைக்குப் போய் ஒரு தனிமையான இடத்தில் அமர்ந்து கொண்டோம்.

"மாலதி, உங்கிட்டே நான் ஒண்ணு சொல்லுவேன்.. கோவிச்சுக்ககூடாது"என்று பீடிகையுடன் நான் பேச ஆரம்பித்தேன்.."சொல்லுங்க. என்ன விஷயம்?"என்று ஆசையுடன் என்னைப் பார்த்துக் கேட்டாள் மாலதி. "அந்த மைதிலி எங்கிட்டே என்ன சொன்னாத் தெரியுமா?" என்றேன். "தெரியும்.. உங்களைக் காதலிக்கறேன்னுதானே சொன்னா.." என்று மாலதி பட் டென்று சொன்னதும், நான் வியப்புடன் அவளைப் பார்த்தேன்.."எல்லாம் எனக்குத் தெரியும்..ஒரு பொண்ணு உங்களை மாதிரி அழ்கான ஆம்பிளைகிட்டே வேற என்ன சொல்லுவா?" என்று அவள் சொன்னதும், நான் கல கலவென்று சிரித்தேன். "இந்த கள்ளச் சிரிப்புதான் எங்களையெல்லாம் பாடாப்படுத்துது.."என்று சொல்லி புன்னகைத்தாள் மாலதி. நான் அவளை நெருங்கி கன்னத்தில் முத்தமிட்டேன்.."ம்ஹும், வேண்டாம்..எல்லாரும் நம்மளையே பாக்கராங்க.." என்று அழகாகத் தடுத்தாள் அவள்.

"நம்ம படிப்பு எப்படா முடியும்..எப்படா உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கு வோம்ன்னு இருக்கு தெரியுமா?"என்று நான் கேட்க, அவள்," எல்லாம் காலம் நேரம் வரும்போது நடக்கும். அதைத்தான் நான் சாமிகிட்டே வேண்டிக்கிட்டேன்.. உங்களுக்குத் தெரியுமா..பிள்ளையார்கிட்டே வேண்டும்போது ரோஜாப்பூ விழுந்துச்சு..அர்ச்சகர் கூட அதை எடுத்து எனக்குக் கொடுத்தார்..இதோ பாருங்க..நிச்சயம் நம்ம கல்யாணம் நடக்கும்"என்று அவள் முக மலர்ச்சியுடன் சொன்னாள். நான் அவள் காட்டிய ரோஜாவை கண்களில் ஒற்றி கொண்டு,"மாலதி, இப்போ என் மனசு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? வா..மீனாட்சி அம்மனையும் தரிசனம் செஞ்சுட்டு வீட்டுக்குப் போகலாம்" என்று அழைத்தேன்..அவள் துள்ளி எழுந்து என்னுடன் கைகோர்த்துக் கொண்டு நடந்தாள்.

இருவரும் அம்மன் சன்னதியில் எதிர் எதிரே நின்று கொண்டு எங்கள் காதல் வாழவும், திருமணத்தில் முடியவும் அம்மனை மனமுருக வேண்டிக் கொண்டோம். அப்புறம் பிரகாரத்தை இருவரும் சுற்றி வந்து வணங்கிவிட்டு, சொக்கநாதரையும் வணங்கினோம். அங்கிருந்த 64 வகையான திருவிளையாடற் புராணங்களையும் அவளுக்கு ஒவ்வொன்றாகக் காட்டி விளக்கினேன். அவள் ஆவலுடன் அதைக் கேட்டுக் கொண்டு வந்தாள். இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள். நான் சககலா வல்லவன் என்று சொன்னதும்.. ஆமாமாம்....நீங்க சகல கலா வல்லவன் தான் நேத்து ராத்திரியே பாத்தேனே என்று வெட்கத்துடன் சொல்லி சிரித்தாள். நான்,"அடி கள்ளி, அந்தக் கலை வேறே..இந்தக் கலை வேறே.." என்று அவள் கன்னத்தைக் கிள்ளியபடி சொல்ல, ஆ...மெல்ல. வலிக்கிது என்று பொய்யாகச் சிணுங்கினாள்.

64 திருவிளையாடல் புராணங்களையும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க..அதேமாதிரி ஆயகலைகள் 64 லேயும் நீங்க புலியாத்தான் இருக்கீங்க..நல்லா படிக்கிறீங்க, நல்லா கதை எழுதறீங்க, நல்லா விளையாடறீங்க, நல்லா படம் வரையறீங்க, பொம்மையெல்லாம் செய்யறீங்க, நல்லாப் பாடறீங்க, நல்லா கவிதை எழுதறீங்க, இன்னும் என்ன பாக்கி வச்சிருக்கீங்க..என்று அவள் சொன்னதும், நல்லா பொம்பளைங்களை மயக்கறேன்..அதைச் சொல்ல மறந்துட்டியேன்னு நான் சொல்ல, ஆங், எல்லாப் பொம்பளைங்களையும் நீங்க மயக்கலாம், ஆனா எனக்கு மட்டும்தான் நீங்க சொந்தம் தெரியுமான்னு அவள் சொல்ல, ஆமாம் மாலதி, நான் உனக்கே உனகுத்தான் சொந்தம், அதேபோல் நீயும் எனக்கே எனக்கு மட்டும்தான் சொந்தம்...என்று நான் சொல்ல, அப்போது கோவில் மணி அடித்தது. கேட்டீங்களா, சாமிகூட ஆமாம்ன்னு சொல்லுது..என்று புன்சிரிப்புடன் சொன்னாள் மாலதி. ஆனால் அது எங்களை வாழ்த்தும் மணியோசை அல்ல.. எங்கள் சந்திப்பின் கடைசி மணியோசை என்பது அவள் வீட்டுக்குப் போனதும் தெரிந்தது.

ஆமாம், நாங்கள் கோவிலிலிருந்து வீட்டுக்குப் போய் இறங்கியதும், என் மாமாவும், அக்காவும் எங்களுக்காகக் காத்துக்கிட்டிருந்த மாதிரி வாசல்லேயே நின்னுக்கிட்டிருந்தாங்க. என் மாமா என்னை ஒருமாதிரி பார்த்துவிட்டு, என்ன நீங்க ரெண்டு பேருமா கோவிலுக்குப் போயிட்டு வரீங்கன்னு கேட்டார். இல்லை மாமா, நான் மாலதியைக் கோவில்லே சந்திச்சேன்..அதான் வீடுவரைக்கும் துணையா அழைச்சுக்கிட்டு வந்தேன் என்று நான் சொல்ல, அவர் ஒன்றும் பேசாமல், மாலதி உங்கிட்டே கொஞ்சம் தனியாப் பேசணும் மேலே வான்னு சொல்லிட்டுப் போயிட்டார். மாலதி என்னை ஒருமாதிரி பாத்துக்கிட்டே அவர் பின்னாலே போனாள்.

நான் அக்கா முகத்தைப் பார்க்க, அவள் என்னை முறைத்துப்பார்த்தபடி, நீயும் உள்ளே வா..உங்கிட்டே கொஞ்சம் பேசணும்ன்னா. நான் பயந்தபடியே உள்ளே சென்றேன். அக்கா என்னைக் கிச்சனுக்குக் கூட்டிப்போய்,"டேய், வேலா, உன் மனசிலே நீ என்ன நினைச்சுக்கிட்டிருக்கே..மாலதி யாருன்னு உனக்குத் தெரியுமா? அவங்கப்பா பெரிய கோடீஸ்வரர்..நீ மாலதிகூட பழகற விஷயம் தெரிஞ்சா..இந்த வீட்டிலே நான் வாழ முடியாது தெரியுமா? உங்க மாமா என்னை வீட்டை விட்டே துரத்திடுவார்..உன்னால என்னோட வாழ்க்கை பாழாகிடும் தெரியுமா"ன்னு சொன்னா. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே புரியலே..பேசாம இருந்தேன்.

"என்னடா நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்.. இடிச்சபுளியாட்டம் நிக்கறே"ன்னு அக்கா கேட்டாள். "இல்லக்கா, வந்து..நீங்க நினைக்கறமாதிரி நான் மாலதிகிட்டே கெட்ட எண்ணத்திலே பழகலே..வெறும் ப்ரண்ட்ஷிப்தான்" என்று நான் சொல்ல, அக்கா கோபத்துடன் என்னைப் பார்த்தாள்.."போதுண்டா..பொய் சொல்லாதே..உங்க ரெண்டுபேரையும் ஒண்ணா கோவில்லே பாத்துட்டு மாமாவோட ஆஃபீஸ் ப்ரெண்ட் வந்து சொல்லிட்டுப் போனாரு..இனிமே நீ இங்கே வராதே..அக்காமேலே உண்மையான அன்பும் பாசமும் இருந்தா.. மாலதியை மறந்துட்டு நல்லாப் படிச்சு..பெரிய ஆஃபீஸர் ஆகி நிறைய சம்பாதிச்சு, பெரிய ஆளா வந்து காட்டு..அப்புறம் நானே உன்னை அவளுக்குக் கல்யாணம் செஞ்சு வக்கறேன். அதுவரைக்கும் நீ இங்கே வராதே..அதுவும் மாலதி அடுத்த வருஷத்திலிருந்து இங்கேதான் தங்கிப் படிக்கப் போறா..அதனாலே கூடுமான வரைக்கும் இங்கே வராம இருக்க பாரு..நான் அம்மாகிட்டேயும் சொல்லிவக்கரேன்னு சொன்னள்.

வேண்டாம்க்கா..அம்மாகிட்டேயெல்லாம் இதைப் பத்தி சொல்ல வேண்டாம். நான் இனிமே மதுரைபக்கமே வரமாட்டேன். இதான் என்னோட கடைசி ட்ரிப் என்று நான் சொன்னதும், அக்கா,"சரி..சரி..உன்னை நம்பறேன். மாமா ஏதாவது கேட்டா, தத்துப்பித்து உளறாம, அவர் என்ன சொன்னாலும் சரி சரின்னு தலையை ஆட்டு என்ன புரியுதா"ன்னு அட்வைஸ் செஞ்சா. நான் கோவில்மாடு போல் தலையாட்டினேன். கொஞ்ச நேரம் கழித்து, என் மாமா மேலேயிருந்து இறங்கி வந்தார். அக்காவை அர்த்ததுடன் பார்க்க, அக்கா,"எல்லாம் சொல்லியாச்சு..நீங்க எதாவது சொல்லணும்னா சொல்லிடுங்க..அவன் நல்ல பிள்ளை..உங்க பேச்சை மீறமாட்டான்"ன்னு சொன்னாள். உடனே என் மாமா என்னிடம்,"வேலா, நான் உன்னை ரொம்ப நல்ல பிள்ளைன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன்..ஆனா நீ இன்னிக்குப் பண்ணின காரியம் அதையெல்லாம் கெடுத்துடுச்சு."என்றார்." ஸாரி மாமா, இனிமே நான் இந்தமாதிரி தப்பை செய்யமாட்டேன். நாங்க ரெண்டு பேரும் ப்ரெண்டாத்தான் பழகினோம்..வேற ஒண்ணும் இல்லே"ன்னு நான் சொல்ல, அவர் தொடர்ந்து,"சரி போனதெல்லாம் போகட்டும்..நீ மாலதிகூட இனிமே பேசவோ, பழகறதோ, தனியா கோவில், குளம், பார்க்குன்னு சந்திக்கறதோ கூடாது..ரெண்டுபேரும் படிக்கற பசங்க..இன்னும் வாழ்கையிலே எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்..அதனாலே படிப்பிலே கவனம் செலுத்தர வழியை பாரு.."ன்னு சொல்லிட்டு தன்னோட ரூமுக்குப் போயிட்டார். மேலே மாலதி விசும்பி விசும்பி அழற சப்தம் கேட்டுச்சு. நான் மனசைக் கல்லாக்கிகிட்டு, விடு விடுன்னு கிளம்பி நடந்தேன். இனிமே அவளை பாக்கக் கூடாதுன்னு மனசிலே வைராக்கியம் பண்ணிக்கிட்டேன். அப்புறம் லீவு முடிஞ்சு நான் காலேஜுக்குப் போய் படிப்பு, கிரிக்கெட்ன்னு மனசை திசை திருப்பினேன்..மாலதியும் என் மனசை விட்டு மறைந்து போனாள்.

முலையழகி அனிதா

Read more...

Shoaib Malik and Sania Mizra

>> Sunday, April 25, 2010



Newly wed tennis star Sania Mirza has said she will retain her maiden name and play for another three to four years.

In an interview to 'People' magazine along with husband and former Pakistan cricket captain Shoaib Malik, Sania said, "no matter what happens I am always going to be Sania Mirza. Maybe later I'll add his name (sic)."

She said they have chosen Palm Jumeirah in Dubai as their new residence.

"My husband wants to live in Palm Jumeirah and I am not fussy, so that's where we live," says Sania.

The couple said their courtship developed over telephone after the first few meetings.

"Suddenly we were constantly texting and then we started talking on the phone for hours. So that's where things started for us," says Sania.

Sania said her mother would keep saying that she was wasting so much money on phone calls. "I would tell her that it's not a waste," the 23-year-old tennis star said.




Read more...

Ravana Songs Free Download



Raavana Songs Free Download




Read more...

Raavan music launch


Raavan movie Cast: Aishwarya rai Bachchan, Abhishek Bachchan, Vikram, Govinda, Karthik Muthuraman, Prabhudeva, Priyamani, Bipasha Basu, Munna, Kishore, Manisha Koirala, Ravi Kishan,Nikhil Dwivedi, Vaiyapuri

raavan songs list | ravana mp3 download

1. Beera Beera – Vijay Prakash
2. Behne De – Karthik
3. Kata Kata – Ila Arun, Sapna Awasthi, Kunal Ganjawala
4. Khilli Re – Reena Bhardwaj
5. Madhuban Chor – Asha Bhonsle, Chitra Sivaraman
6. Ranjha Ranjha – Rekha Bhardwaj, Javed Ali
7. Thok De Killi – Sukhwinder Singh





Read more...
eXTReMe Tracker
PageRank Checker

wibiya widget

  © Blogger template sexbygirls.blogspot.com by sexbygirls.blogspot.com 2009

Back to TOP